logo


1 / 3
2 / 3
3 / 3




    வீடு அடமானக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

வீடு அடமானக் கடன்

2.

கடன் தொகை ( அதிகபட்சம்)

கடன் நோக்கத்தின் தன்மைக்கு ஏற்ப கடன் அளவு நிர்ணயிக்கப்படும். உச்ச அளவு ரூ20/- லட்சம் வரை

3.

கடன் நோக்கம்

1).திருமணச் செலவு
2).கல்விச் செலவு
3).மருத்துவ செலவு
4).வியாபார அபிவிருத்தி
5).பதிவுபெற்ற முன் கடன் தீர்த்தல்
6).வீடு புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல்

4.

தவணை காலம்

10 ஆண்டுகள்

5.

விண்ணப்பதாரரின் தகுதி

1)இணை உறுப்பினராதல் வேண்டும்
2) விண்ணப்பதாரர் நிரந்தர பணியில் உள்ளவராகவோ அல்லது தொழில் புரிவோராகவோ இருத்தல் வேண்டும்.
3) அரசு ஊழியராக இருந்தால் சம்பள சான்றிதழும் அல்லது தொழில் புரிவோராக இருந்தால் மூன்றாண்டு வருமான வரி தாக்கல் அறிக்கை இருத்தல் வேண்டும். மேலும் கடனுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை மனுதாரரின் மாத வருவாயில் மூன்றில் ஒரு பங்கிற்கு (1/3) மேல் இருக்கக்கூடாது.
4) திருநெல்வேலி மாவட்ட செயல் எல்லைக்குள் இருக்கவேண்டும்.
5) விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
6) கட்டப்பட்ட வீட்டிற்கான அசல் பத்திரம் மற்றும் மூலபத்திரம் இருக்க வேண்டும்.
7) கட்டிடம் வங்கியின் பெயருக்கு அடமானம் செய்து கொடுக்க வேண்டும்.
8) 30 ஆண்டுகள் வில்லங்க சான்று சமர்ப்பிக்க வேண்டும்
9) மாதாந்திர சம்த்தவணை மற்றும் நிலுவைக்கு 14% வட்டி கணக்கிடப்படும்.
10) பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டிடம் அல்லது வீட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் கடம் அனுமதிக்கப்படும். மேலும் கட்டிடம் அனுமதி மற்றும் வரைபடம் ஒப்புதல் பெற்றதாக இருக்க வேண்டும்
11) பொறியாளர் மதிப்பீட்டில் 50% அனுமதிக்கப்படும்.
12) கடன் கோரும் காரியத்திற்கான திட்ட அறிக்கை அல்லது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
13) கடன் காலம் 10 ஆண்டுகள் ரூ20/-லட்சம் வரை
14) அடமானம் கொடுக்கும் வீடு அல்லது கட்டடம் , கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்து, அல்லது நல்ல மதிப்புள்ளதாக இருந்தால் கடன் வழங்க பரிசீலிக்கலாம்.
15) கள / கிளை மேலாளர் அதுபோன்ற , கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, வழிகாட்டி மதிப்பு ( Guideline value) மற்றும் சந்தை மதிப்பை ( Market Value) பெற்று, வங்கியின் பொறியாளர் மதிப்பீட்டையும் பெற வேண்டும். வழிகாட்டும் மதிப்பை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்று, பொறியாளர் மதிப்பீட்டையும் பெற்று சராசரி மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் 50% கடன் தொகையாக மதிப்பீடு செய்யலாம்.
16) கடனுக்காக ஈடாக காட்டப்படும் வீடு அல்லது கட்டடத்தின் மதிப்பு, கடன் தேவைக்கு குறைவாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள தேசிய சேமிப்பு கொடுக்கும் கட்டடத்துடன் சேர்ந்த காலியிடம் ஆகியவற்றை தேவைக்கேற்ப கூடுதல் ஈடாக கொடுக்கலாம்.
17) கட்டடத்தின் சேராமல் தனியாக உள்ள வேறு காலியிடத்தை கூடுதல் ஈடாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

6.

இணை உறுப்பினர்

1)ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்.
2) மனுதாரர் மற்றும் அவரோடு இணைந்து கையொப்பமிடும் நபர்கள் வங்கியில் ரூ100/- (நூறு) செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்.
3) பங்குதாரர் நிறுவனமாக இருந்தால் பங்குதாரர்கள் அனைவரும் இணை உறுப்பினராக வேண்டும்.

7.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1) கடன் விண்ணப்பம் வங்கியின் கிளை அல்லது தலைமையகத்தில் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
2) மனையின் அசல் ஆவணத்துடன் மூல உரிமை பத்திரம்.
3) மனை இடத்தின் பட்டா மாறுதல் வழங்கிய வட்டாச்சியார் ஆணை நகல்
4) வட்டாச்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட கணிணி பட்டா மற்றும் அடங்கல் பதிவேடு அசல் ஆவணங்கள்.
5) கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட மனையின் புல வரைபடம்.
6) வில்லங்கச் சான்று , 30 முழுமையான ஆண்டுகளுக்கு, கடன் மனு விண்ணப்பிக்கும் காலம் வரை.
7) வீட்டுமனை ஒப்புதல், கட்டட அனுமதி மற்றும் வரைபடம் (Blue Print) ஒப்புதல் , உள்ளூர் திட்ட குழுமம / உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றது இரண்டு நகல்கள்.
8) வங்கியின் ஒப்புதல் பெற்ற பட்டய பொறியாளர் ( Charted Engineer) கட்டட மதிப்பீடு , இரண்டு நகல்கள்.
9) மனுதாரர்களின் புகைப்படத்துடன் அடையாளச் சான்று. வயது சான்று, வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் கார்டு / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் நகல் / பான் கார்டு நகல் ஆகிய ஏதாவது ஒன்று.
10) இருப்பிட சான்றுக்கு ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / சமீபத்தில் கட்டப்பட்ட தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று.
11)தொழில் மற்றும் வியாபாரம் செய்யப்படும் இட முகவரிச் சான்று.
12) ஊதியம் பெறுபவர்கள், பணியாற்றும் நிறுவனத்தில் ஊதியச்சான்று பெற வேண்டும். ஊதியம் வரவு வைக்கப்படுகின்ற வங்கியிலுள்ள ஆறுமாத கணக்கு நகல்.
13) தொழில் / வியாபாரம் / சுயதொழில் செய்பவர்கள் கடந்த மூன்று வருட வருமான வரிக்கு சமர்ப்பித்த படிவ நகல்.
14) மாதம் ரூ 10,000/- ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்) துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வட்டாச்சியார் / பட்டய கணக்காளரிடம், தொழிம் மற்றும் வருமானத்திற்கு சான்று பெறவேண்டும்.
15) மனையின் அரசு வழிகாட்டும் மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பெற்று சராசரி மதிப்பு இணைக்கப்பட வேண்டும்.
16) உள்ளாட்சி / பேரூராட்சி / நகராட்சிக்கு செலுத்திய சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி நடப்பு ஆண்டுகளுக்கு செலுத்தியது இணைக்கப்பட வேண்டும்.
17) மின் கட்டணம் கடந்த மாதத்திற்கு செலுத்திய ரசீது இணைக்கப்பட வேண்டும்.
18) தொழில், வியாபாரமாக இருந்தால், வியாபாரம் நடைபெறுவதற்கான தொழில் வரி ரசீது நகல் இணைக்கப்பட வேண்டும்.
19) தொழில் செய்யும் இடம் வாடகை கட்டிடமாக இருந்தால் கட்டிட உரிமையாளரிடம் 3 முதல் 5 ஆண்டுகள் ஒப்பந்த ஆவண நகல் சமர்ப்பிக்கவேண்டும்.

8.

வட்டி விழுக்காடு

12 %

9.

பிணையம்

1) வீடு அல்லது கட்டிடம், வங்கிக்கு கடன் தாரரால் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமானம் செய்து கொடுக்க வேண்டும். பின்னர், வங்கியின் பெயர் வருமாறு வில்லங்கச் சான்று பெற வேண்டும்.
2) அடமானம் வைக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் மூல ஆவணங்களை கடன் தொகை முடியும் வரை வங்கியில் வைத்திருக்க மனுதாரர் சம்மதக்கடிதம் கொடுக்க வேண்டும்.
3) மனுதாரர் கடனை வாங்கிய நோக்கத்திற்கே பயன்படுத்துவார் என்பதற்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

10.

சட்ட ஆலோசகர் மற்றும் பரிசீலனை கட்டணம்

1) கடன் மனு சமர்ப்பிக்கும்போது, கடன் தொகையில் 1% ( ஒரு விழுக்காடு) பரிசீலனை கட்டணமாக மனுதாரரிடம் பெற்று கடன் மனுவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
2) இக்கட்டணம் குறைந்தது ரூ.500/- உச்ச அளவாக ரூ2,500/- வரை பெறலாம் + GST
3) இக்கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது.
4) வங்கியின் சட்ட ஆலோசகரிடம் சட்ட கருத்து பெற வேண்டும்.

11.

காப்பீடு ( Insurance)

1) அடமான சொத்து, நெருப்பு, வெள்ளம், புயல் மற்றும் கலவரம் ஆகியவற்றை உள்ளடக்கி, கடன் மனுதாரர் மற்றும் வங்கியின் பெயரில் இணைந்து காப்பீடு செய்ய வேண்டும்.
2) மனுதாரர், தொழில்வரி, சொத்துவரி, மின் கட்டணம், தண்ணீர் வரி ஆகியவற்றை முறையாக செலுத்தி வரவேண்டும். செலுத்தப்பட்டதற்கான தகவலை வங்கிக்கு தெரிவிக்கவேண்டும்.

12.

வேறு வங்கியில் கடன் நிலுவைச் சான்று ( NOC)

அருகில் உள்ள வங்கி கிளைகளுக்கு கடிதம் எழுதி, கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டும்.

13.

ஆவணங்களை திரும்ப கொடுத்தல்

1) கடன் தொகை முழுவதையும் மனுதாரர் செலுத்திய பின்னர், மூல அல்லது அசல் ஆவணங்களை அவருக்கு கொடுக்க வேண்டும்.
2) ஆவணங்கள் திரும்ப பெறப்படாமல் இருந்தால், ஆண்டுக்கு ரூ500/- (ஐநூறு) பாதுகாப்புக் கட்டணம் கடன் தாரரிடம் வசூல் செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் ஆவணங்களை திரும்ப கொடுக்கும் வரை வசூலிக்க வேண்டும்.
3) கடன் தாரரால், கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்ட பின்னர், மேற்படி அடமான சொத்திற்கான வில்லங்கம் வங்கியால் நீக்கித்தரப்படவேண்டும்.

15.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

1) சொத்துக்களுக்கான மூலப்பத்திரம்.
2) மனுதாரர் பெயரில் பட்டா ( கணினி பட்டா)
3) 30 வருட வில்லங்கச்சான்று
4) அடங்கல் பதிவேடு
5. ஒப்புதல் செய்யப்பட்ட வீட்டு / மனை வரைபடம்
6. பதிவு பெற்ற பொறியாளர் (Charted Engineer) மதிப்பீட்டு அறிக்கை
7. திட்ட குழுமம் / ஊராட்சி ஒப்புதல் சான்று நகல்
8. வட்டாச்சியரிடமிருந்து வருவாய் சான்றிதழ்
9. ஊராட்சி / நகராட்சியிடமிருந்து கட்டட வயது சான்று
10. தொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்றாண்டு வருமான வரி படிவ நகல்
11.தனிநபர் அடையாள அட்டை (Individual identity card)
12. கடன் தாரர் மற்றும் பிணையதாரர் புகைப்படங்கள்
13. இறுதியாக மின் கட்டணம், சொத்துவரி செலுத்திய ரசீது.
14 தொழில் நிறுவன முகவரி சான்று ( மாத ஊதியம் பெறாதவர்)
15. விவசாயிகள் மற்றும் மற்றவர்களின் வருமானம் ரூ.10,000/- அல்லது அதற்கு மேல் இருந்தால், வட்டாச்சியர் அல்லது பட்டய கணக்காளர் வருவாய் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
16. ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

16.

கடனை முடிவுகட்டுதல் ( Foreclosure)

1) அடமானம் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு குறைந்து, அந்த குறைவை ஈடுசெய்ய, கூடுதல் அடமானம் கொடுக்காமல் இருந்தால் , அல்லது மதிப்பு குறைந்த அளவுக்கான் தொகையை செலுத்தாமல் இருந்தால் , கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.
2) கடன் நிபந்தனைகளை மீறி செயல்பட்டால், கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.
3) வங்கியின் நகல் பாதிக்கப்படுமானால் அல்லது ஏதாவது மறைக்கப்பட்டது தெரியவந்தால், கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.

17.

கடனை திரும்ப செலுத்துதல்

1) மாதாந்திர தவணை தொகையை ( Equal Monthly Installment (EMI)) ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும்.
2) கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, குடிபுகுந்த உடன், அல்லது கடன் முதல் தவணி பட்டுவாடா செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் முடிந்த நாள், இதில் எது முந்தியதோ, அதிலிருந்து முதல் தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3) கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினால், வாங்கிய நாளிலிருந்து முதல் மாதம், முதல் தவணைத் தொகைசெலுத்த வேண்டும்.
4) தவணைத்தொகை கட்டத் தவறினால் பதிவுத் தபால் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து செலவுத்தொகை உட்பட வசூல் செய்ய வேண்டும்.
5) மனுதாரர் இறந்துவிட்டால் வாரிசுகளிடமிருந்து முழுத்தொகையும் வசூலிக்கப்பட வேண்டும்.
6) ஆனால், கடன் பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்கு முன்பே, கடன் தொகை முழுவதையும் செலுத்தினால், ரூ 5,000/- அல்லது கடன் நிலுவையில் ஒரு விழுக்காடு (1%) இதில் எது அதிகமோ அத்தொகை வங்கி கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
7) வேறு வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் கடன் முழுவதையும் எடுத்துக் கொள்வது மூலம் ( Take Over) கடன் நிலுவை செலுத்துவதாக இருந்தால், அப்போதைய தொகைக்கு 2% வங்கி கட்டணம் வசூலிக்க வேண்டும். இத்தொகைக்கு GST வசூலிக்க வேண்டும்.

18.

பொதுவானவை

1) கடன் மனுவில் அனைத்து தகவல்களும் இணைப்புகளும் உள்ளனவா, என்பதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும். சட்ட ஆலோசகரின் கருத்துக்குப் பின்னர், கடன் மனு அனுமதிக்கும் பரிசீலிக்கப்படவேண்டும்.
2) கட்டடத்தின் சந்தை மதிப்பு மற்றும் அரசு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பையும் தெரிந்து , கட்டட மதிப்பை முடிவு செய்ய வேண்டும்.
3) வங்கிக்கு அடமானம் கொடுத்த பின்னர், வங்கியின் பெயரும் சேர்த்து வில்லங்கச் சான்று பெற வேண்டும்.
4) ஒவ்வொரு ஆண்டும் வில்லங்கச்சான்று பெற்று கோப்பில் வைக்க வேண்டும்.

19.

கடன் அனுமதிக்குப் பின்னர்

காப்பீடு, ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கியவரால் புதுப்பிக்கப்படுவதை, வங்கி உறுதி செய்ய வேண்டும்.